இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் குடும்பங்களுக்கு அரசாங்கம் கூடுதலானவற்றைச் செய்து உத்தரவாதத் தொகுப்புத் திட்டத்தை மேம்படுத்தும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
அனைத்து சிங்கப்பூர் குடும்பங்களுக்கும் கூடுதலாக $600 பெறுமானமுள்ள சமூக மேம்பாட்டு மன்ற (சிடிசி) பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும். முதல் தொகுதியாக $300, 2024 ஜூன் இறுதிக்குள் வழங்கப்படும். 2025 ஜனவரியில் எஞ்சிய $300 வழங்கப்படும்.
2024 ஜூன் இறுதியில் வழங்கப்படும் பற்றுச்சீட்டுகள் ஆண்டிறுதியில் காலாவதியாகும். 2025 ஜனவரியில் வழங்கப்படும் பற்றுச்சீட்டுகள் அடுத்த ஆண்டிறுதியில் காலாவதியாகும்.