ஜோகூரில் சாலை வன்முறை: சிங்கப்பூரருக்கு $1,545 அபராதம்

மலேசியாவின் வடக்கு-கிழக்கு விரைவுச்சாலையில் வடக்கே சென்றுகொண்டிருந்தபோது சாலை வன்முறையில் ஈடுபட்ட குற்றத்திற்காக சோ கியான் ஹெய் என்னும் சிங்கப்பூரருக்கு 1,545 வெள்ளி (5,500 ரிங்கிட்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மலேசிய நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தபோது 45 வயது சோ தனது குற்றங்களை ஒப்புக்கொண்டார்.

பிப்ரவரி 10ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் சோ முவார் பகுதி அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருக்கு முன்னால் சென்ற கொண்டிருந்த நபருக்கும் சோவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த சோ தன் முன் நின்றுகொண்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்தார். அது குறித்த காணொளியும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.

அதைத்தொடர்ந்து ஜோகூர் காவல்துறை அதிகாரிகள் சம்பவத்தை விசாரித்தனர். அதன் பின்னர் சோ அடையாளம் காணப்பட்டு பாகாங்கின் கெந்திங் மலையில் திங்கட்கிழமை (பிப்ரவரி 12) அதிகாலை 3.30 மணியளவில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

சோ சிங்கப்பூரில் டாக்சி ஓட்டுநராக உள்ளார் என்று நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தன. காரின் கண்ணாடியை உடைத்ததால் 2,500 ரிங்கிட் சேதம் ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சோ அபராதம் செலுத்தவில்லை என்றால் 12 மாதம் சிறைத் தண்டனை என்று அறிவிக்கப்பட்டது. சோ அபராதத்தை செலுத்திவிட்டு நீதிமன்றத்தில் வெளியேறியதாக தி ஸ்டார் குறிப்பிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!