சீனப் புத்தாண்டுக்கு முதல் நாளன்று பீப்பள்ஸ் பார்க் காம்பிளக்ஸ் கடைத்தொகுதியில் சண்டை மூண்டது.
இந்தச் சம்பவம் பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி மாலை நிகழ்ந்தது.
கடைத்தொகுதியில் உள்ள உணவு நிலையத்தில் உணவருந்திக்கொண்டிருந்தோருடன் 29 வயது ஆடவர் கைகலப்பில் ஈடுபட்டார்.
இதில் அவரது மூக்கில் காயங்கள் ஏற்பட்டன.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் அவருக்கு முதலுதவி அளித்ததாக அறியப்படுகிறது.
அந்த ஆடவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இதுதொடர்பாக காவல்துறை விசாரணை நடத்துகிறது.