15 வயது மாணவியுடன் பாலியல் செயல்; குற்றத்தை ஒப்புக்கொண்டார் முழுநேர ராணுவ வீரர்

கீழே விழுந்த 15 வயதுச் சிறுமிக்கு உதவிய சிங்கப்பூர் ஆயுதப் படையின் முழுநேர ராணுவ வீரர் சுப்பிரமணியம் தபுரான் ரங்கசாமி, 50, பின்னர் அச்சிறுமியுடன் பாலியல் உறவு கொள்ள முற்பட்டார்.

பதினாறு வயதுக்குட்பட்ட ஒருவருடன் பாலியல் உறவுகொள்ள முற்பட்ட குற்றத்தை அவர் செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டார்.

பிப்ரவரி 1ஆம் தேதி சுப்பிரமணியத்துக்கு தண்டனை விதிக்கப்படும். அப்போது வேறு இரு குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்படும்.

இப்போது 17 வயதாகும் அச்சிறுமியின் அடையாளத்தைப் பாதுகாக்க நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

2021 டிசம்பர் 6ஆம் தேதி பள்ளி விடுமுறையின்போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் சுனில் நாயர் தெரிவித்தார்.

சம்பவம் நிகழ்ந்து இரு நாள்கள் கழித்து அச்சிறுமி காவல்துறையிடம் புகார் அளித்தார்.

இந்நிலையில், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த தற்காப்பு அமைச்சின் பேச்சாளர், முதலாம் வாரண்ட் அதிகாரியான சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!