வேகமாக மூப்படையும் சிங்கப்பூர் மக்கள்தொகை

சிங்கப்பூரின் மக்கள்தொகை தொடர்ந்து வேகமாக மூப்படைகிறது. பிள்ளைகள் பிறப்பது குறைவாக இருக்கிறது. மக்களின் ஆயுள் கூடிவருகிறது. இவையே மக்கள்தொகை மூப்படைய காரணங்கள்.

அரசாங்கத்தின் மக்கள்தொகை பற்றிய வருடாந்திர சுருக்க அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அது இவ்வாறு தெரிவிக்கிறது.

சிங்கப்பூரில் 65 வயதும் அதற்கு அதிக வயதும் உள்ள குடிமக்களின் விகிதாச்சாரம் முந்தைய 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் வேகமாகக் கூடுகிறது.

கடந்த 2013ல் 11.7 விழுக்காடாக இருந்த அந்த விகிதம் 2023ல் 19.1 விழுக்காடாக கூடி இருக்கிறது.

சிங்கப்பூரில் வரும் 2030ஆவது ஆண்டுவாக்கில் குடிமக்கள் நால்வரில் ஒருவர் அல்லது 24.1 விழுக்காட்டினருக்கு வயது 65 ஆக அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும்.

தேசிய மக்கள்தொகை, மனித ஆற்றல் பிரிவு வெளியிட்டு உள்ள அந்த அறிக்கை, 1946ஆம் ஆண்டுக்கும் 1964ஆம் ஆண்டுக்கும் இடையில் பிறந்தவர்கள் 65க்குப் பிந்தைய வயதை எட்டுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டியது.

இவர்கள் இந்த ஆண்டில் 59 முதல் 77 வரை வயதுள்ளவர்களாக இருப்பார்கள் என்று அறிக்கை தெரிவித்து உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!