அடுத்த ஈராண்டுகளின் தேசிய தின அணிவகுப்பு பாடாங்கில் நடைபெறும்

அடுத்த ஈராண்டுகளின் (2024, 2025) தேசிய தின அணிவகுப்பு பாடாங்கில் நடைபெறும் என்று தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை (செப். 29) அந்த அறிவிப்பு வெளியானது.

இரு அணிவகுப்புகளிலும் நாட்டின் முக்கிய மைல்கற்களைக் கொண்டாடும் அம்சங்கள் இடம்பெறும்.

அடுத்த ஆண்டுடன் சிங்கப்பூர் அதன் தேசியத் தற்காப்புக் கொள்கையான முழுமைத் தற்காப்பைப் பின்பற்றத் தொடங்கி 40ஆம் ஆண்டுகள் நிறைவடையும்.

அதற்கு அடுத்த ஆண்டு, நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் நிறைவடையும்.

பாடாங்கின் வரலாற்று முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு அதைத் தேர்ந்தெடுத்ததாக 2025ஆம் ஆண்டு தேசிய தின அணிவகுப்பு செயற்குழு கூறியது.

1966ஆம் ஆண்டு சிங்கப்பூரின் முதல் தேசிய தின அணிவகுப்பு பாடாங்கில்தான் நடைபெற்றது.

2015ல் நாட்டின் 50வது தேசிய தின அணிவகுப்பும், சிங்கப்பூரின் 200ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்கள் அனுசரிக்கப்பட்ட 2019ஆம் ஆண்டிலும் பாடாங்கில்தான் தேசிய தின அணிவகுப்புகள் இடம்பெற்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!