தேசிய விளையாட்டரங்கில் பிரேசிலிய வீரரின் ஹாட்ரிக் கோல்

சிங்கப்பூர் தேசிய விளையாட்டரங்கில் புதன்கிழமை இரவு நடைபெற்ற காற்பந்து ஆட்டத்தில் லயன் சிட்டி செய்லர்ஸ் குழுவை 5-1 எனும் கோல் கணக்கில் இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் (இபிஎல்) டோட்டன்ஹேம் ஹாட்ஸ்பர் குழு தோற்கடித்தது.

இபிஎல் பருவம் தொடங்குவதற்கு முன்பு சிங்கப்பூருக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது ஸ்பர்ஸ். இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பிரேசிலிய நட்சத்திர ஆட்டக்காரர் ரிச்சார்லிசன் மின்னினார். இந்த ஆட்டத்தில் ஹாட்ரிக் கோல் அடித்து ஸ்பர்சின் வெற்றிக்கு அவர் வித்திட்டார்.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஹேரி கேனின் மாற்று ஆட்டக்காரராக ரிச்சார்லிசன், 26, களமிறங்கிய உடனேயே ஸ்பர்சுக்கு உத்வேகம் பிறந்தது. அவர் களமிறங்கியதைத் தொடர்ந்து ஐந்து நிமிடங்களுக்குள் இரு கோல்களைப் போட்டார். அவரது மூன்றாவது கோல் ஆட்டத்தின் இறுதியில் வந்தது.

ஆட்டத்திற்குப் பிறகு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய ரிச்சார்லிசன், “ஸ்பர்சுக்காக முதல் ஹாட்ரிக் கோலை அடித்ததில் மகிழ்ச்சி கொள்கிறேன். எங்களுக்கு நல்லதொரு தொடக்கம் கிடைத்துள்ளது. இதே நிலையை இனி லீக்கிலும் கடைப்பிடிக்க வேண்டும்,” என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!