புலன்விசாரணையின்போது அமைச்சர் ஈஸ்வரன் சிங்கப்பூரில் இருப்பார்

போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் இப்போது விடுப்பில் இருக்கிறார். லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவின் விசாரணையில் அவர் உதவி வருகிறார்.

அமைச்சர் ஈஸ்வரன் தொடர்ந்து சிங்கப்பூரில் இருந்து வருவார் என்று பிரதமர் அலுவலகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

சேனல் நியூஸ் ஆசியா நிறுவனத்திற்கு அறிக்கை மூலம் பதிலளித்த பிரதமர் அலுவலகம், திரு ஈஸ்வரன் எந்த அதிகாரபூர்வ வளங்களையும் அரசாங்கக் கட்டடங்களையும் எட்ட வழி இருக்காது என்று தெரிவித்தது.

தான் கண்டறிந்த ஒரு விவகாரம் தொடர்பிலான புலன்விசாரணையில் திரு ஈஸ்வரன் உதவி வருவதாக அந்தப் பிரிவு புதன்கிழமை தெரிவித்திருந்தது.

மேல் விவரங்கள் எதையும் அந்தப் பிரிவு தெரிவிக்கவில்லை. புலன்விசாரணை முடியும் வரை விடுப்பில் செல்லும்படி அமைச்சர் ஈஸ்வரனுக்குப் பிரதமர் லீ சியன் லூங் உத்தரவிட்டார்.

திரு ஈஸ்வரன் விடுப்பில் இருக்கையில் மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் தற்காலிக போக்குவரத்து அமைச்சராகச் செயல்படுவார்.

திரு ஈஸ்வரனின் வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியைச் சேர்ந்த இதர நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு ஈஸ்வரனின் பணிகளைக் கவனிப்பார்கள் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்து இருக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!