உலகம் முழுவதும் உள்ள விமானத் துறை, ராணுவம், அரசாங்கம் ஆகியவற்றின் அதிகாரிகள், வர்த்தகர்கள், பார்வையாளர்களைஈர்க்கும் சிங்கப்பூரின் விமானக் கண்காட்சி நாளை தொடங்குகிறது.
கிருமிப் பரவல் தொடங்கிய பிறகு சிங்கப்பூரில் நடத்தப்படும் மாபெரும் நிகழ்ச்சி இது. இதில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதியில்லை. ஆனால் இணையம் வழி யாக நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த விமானக் கண்காட்சி, பிப்ரவரி 18ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு நீடிக்கும். ஏறக்குறைய 39 நாடு களைச் சேர்ந்த 600 நிறுவனங் களின் 13,000க்கும் மேற்பட்ட வர்த்தகப் பேராளர்கள் இதில் பங்கேற் கின்றனர்.
2020ல் நடத்தப்பட்ட விமானக் கண்காட்சியுடன் ஒப்பிடுகையில் இது குறைவு. இருந்தாலும் உலகின் பல முன்னணி நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன.
2020ல் 110 நாடுகளையும் இவ்வட்டாரத்தையும் சேர்ந்த 30,000க்கும் மேற்பட்ட வர்த்தகப் பேராளர்கள் பங்கேற்றனர்.
சிங்கப்பூரின் விமானக் கண்காட்சி, கொவிட்-19 புதிய நடைமுறைகளை சோதனை செய்வதற்கான 'மைஸ்' எனப்படும் (Mice- Meetings, Incentives, Conference, Exhibition) நிகழ்வுகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
கண்காட்சியில் பங்கேற்பவர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டவர்களாக இருக்க வேண்டும். முன்பதிவு செய்திருக்க வேண்டும். சாப்பிடுவதற்கு தனி இடம் ஒதுக்கப் பட்டிருக்க வேண்டும், எல்லா இடங்களும் கிருமி நாசினித் தெளித்து அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கொவிட்-19 நடைமுறைகள் பின்பற்றப்படவிருக் கின்றன.
இவ்வாண்டு 'ஏர்பஸ்', சீனாவின் விமானத்துறை கார்ப்பரேஷன், போயிங், இஸ்ரேலிய விண்வெளி தொழில்துறை, லாக்ஹீட் மார்ட்டின், ரஃபேல் டிஃபன்ஸ் சிஸ்டம்ஸ், ரோல்ஸ் ராய்ஸ், தேல்ஸ், துருக்கி விண்வெளித் துறை, உள்ளூரின் எஸ்டி இன்ஜினியரிங் உட்பட பல உலகப் புகழ்பெற்ற நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
சாங்கி கண்காட்சி நிலையத்தில் நேற்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய 'எக்ஸ்பீரியா இவென்ட்ஸ்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் லெக் செட் லாம், கிருமிப்பரவல் சூழ்நிலையால் பங் கேற்பாளர்கள் குறைவாக இருப்பதாக தெரிவித்தார்.
இதனால் விமானக் காட்சியின் தரம் பாதிக்கப்படாது என்றார் அவர்.
உலகின் 20 முன்னணி விமான நிறுவனங்களில் 70 விழுக்காட்டுக்கு மேல் காட்சியில் பங்கேற் பதை அவர் சுட்டிக்காட்டினார்.
விமானச் சாகசம் பிப்ரவரி 15 முதல் 18 வரை தினமும் நேரடியாக இணையம் வழி ஒளிபரப்பப்படும்.
இந்திய விமானப் படையின் இலகுரக போர் விமானமான தேஜாசும் சாகசங்களைக் காட்டவிருக்கிறது.
அது மட்டுமல்லாமல் ஏர்பஸ்ஸின் 'A350-1000' விமானமும் போயிங்கின் அகலமான 'B777-9' விமானமும் முதல் முறையாக இதில் அறிமுகம் காண்கின்றன.
2018ஆம் ஆண்டின் விமானக் காட்சியில் கடைசியாக பங்கேற்ற இந்தோனீசியாவின் 'ஜூபிட்டர்' ஆகாய சாகசக் குழு, இம்முறை ஆறு விமான வடிவங்களை செய்து காட்டவிருக்கிறது.
சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையின் 'F-16C', 'AH-64D' அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், அெமரிக்காவின் கடற்துறை நிறுவனத்தின் 'F-35B Lightning II', அமெரிக்க விமானப் படையின் 'B-52 Stratofortress' குண்டு வீசும் விமானம் ஆகியவையும் ஆகாயக் காட்சிக்கு தயாராக உள்ளன.