இன்றைய தேதி 2-2-2022, சுருக்கமாக 2-2-22 என்றும் பலர் நாஆள்காட்டிகள் காண்பிக்கும். இந்த தேதி அபூர்வமாக வரும் தேதி என்பதால் இன்று தீவு முழுவதும் உள்ள 4டி கடைகளில் மக்கள் வரிசை வரிசையாய் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
சிங்கப்பூரில் 4டி, டோட்டோ அதிர்ஷ்ட எண்கள் எடுப்பது மிகவும் பிரபலம். அதுவும் சிறப்பான எண்கள், தேதிகளில் மக்கள் அதிகமாகவே 4டி கடைகளுக்குப் படையெடுப்பதும் வழக்கம்.
இவ்வாண்டும் இன்றைய தேதியும் அபூர்வமாகத் தோன்றும் தேதி என்பதால் அதிர்ஷ்ட தேவதை தங்கள் மேல் கருணை காட்டுவாள் என்று தீவின் பல இடங்களிலும் உள்ள 4டி, சிங்கப்பூர் பூல்ஸ் கிளைகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எண்களை வாங்கிச் சென்றனர்.