தங்களிடம் பணியாற்றும் முக்கிய ஊழியர்களின் திறன் மேம்பாட்டில் முதலீடு செய்ய பாதிக்கும் மேற்பட்ட உள்ளூர் நிறுவனங்களின் முதலாளிகள் ஆர்வம் கொண்டுள்ளனர். அதன் மூலம் தங்கள் ஊழியரணியின் பலத்தை வலுப்படுத்தி, கொவிட்-19 சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ள அவர்கள் விரும்புகின்றனர் என்றும் மெர்சர் ஆய்வு ஒன்று கூறுகிறது.
கொள்ளைநோயால் நிதி நிலைமை பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில், இங்குள்ள 63% நிறுவனங்கள் ஊழியர் மறுசீரமைப்பை தங்கள் முன்னுரிமைப் பட்டியலில் முதல் இடத்தில் வைத்துள்ளன.
தங்கள் ஊழியர்களுக்கு புதிய திறன்களைக் கற்றுக்கொடுப்பது முதலாளிகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு 41% நிறுவனங்களும், தங்களின் முக்கிய ஊழியர்களுக்கு புதிய திறன்களை வழங்குவதில் முதலீடு செய்ய 41% நிறுவனங்களும் ஆர்வம் தெரிவித்துள்ளன.
ஊழியர்களின் மனஉறுதியை வலுப்படுத்த 32% நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளது முன்னுரிமை பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது என்றும் கூறப்பட்டது.
தங்கள் நிறுவனங்களின் உருமாற்றத்துக்கு ஊழியர்களின் திறன்களை மேம்படுத்துவது முக்கியம் என்று முதலாளிகள் விருப்பப்பட்டாலும் அந்நிறுவனங்களின் 9% மனிதவளப் பிரிவுத் தலைவர்கள்தான் அதன் தொடர்பிலான சம்பள மறுசீரமைப்பை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். உலக அளவிலான விகிதமான 15 விழுக்காட்டைவிட காட்டிலும் இது குறைவு.
"2021ல் நிறுவனங்களில் புத்துணர்ச்சிக்கு ஊழியர் மேம்பாடு முக்கியமானது. அதற்கு ஏற்றாற்போல் ஊழியர்கள் புதிய திறன்களைக் கற்றுக்கொண்டு தங்களை மேம்மடுத்திக்கொண்டு அதன் மூலம் தங்கள் நிறுவன வளர்ச்சிக்கும் பங்காற்ற வேண்டும்," என்றார் மெர்சர் ஆலோசனை நிறுவனத்தின் உள்ளூர் வாழ்க்கைத்தொழில் வர்த்தகத் தலைவரான திரு லுயிஸ் கராட்.
தங்கள் ஊழியர் மேம்பாடு தொடர்பான முக்கிய தகவல் களை 24% நிறுவனங்களே சேக ரிக்கின்றன என்றார் திரு கராட்.