சிங்கப்பூரில் நடைபெற்ற இரு நிகழ்ச்சிகளை காவல்துறை விசாரிக்கிறது

இஸ்ரேல்-ஹமாஸ் பூசல் தொடர்பில், உத்தேசக் குற்றங்களுக்காக சிங்கப்பூரில் இரண்டு நிகழ்ச்சிகளை காவல்துறை விசாரித்து வருகிறது.

அந்த இரண்டு நிகழ்ச்சிகளும் பிப்ரவரி 2ஆம் தேதி நடைபெற்றன.

பிற்பகல் 2 மணிவாக்கில், 70 பேர் கொண்ட குழு ஆர்ச்சர்ட் சாலையில் கூடி, இஸ்தானாவை நோக்கிச் சென்றதாக காவல்துறை கூறியது.

பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, தர்ப்பூசணிப் பழத்தின் படங்களைக் கொண்ட குடைகளை அவர்கள் ஏந்திச்சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

மற்றொன்று, பிப்ரவரி 2ஆம் தேதி இரவு 7.30 மணிவாக்கில் நடைபெற்ற தனிபட்ட நிகழ்வாகும்.

அந்த நிகழ்ச்சி குறித்த காணொளி இணையத்தில் பரவியது பற்றிய புகார்கள் வந்ததாகக் காவல்துறை தெரிவித்தது. அந்தக் காணொளியில் நபர் ஒருவர் பாலஸ்தீனத்துக்கு ஆதரவான வாசகங்களை முழக்கமிட்டுக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

தற்போதைய இஸ்‌ரேல்-ஹமாஸ் பூசலினால் பதற்றநிலை அதிகரித்துவரும் சூழலில், அது குறித்த பொதுக் கூட்டங்களின் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த அக்கறைகள் இருப்பதாக காவல்துறை மதிப்பிட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!