கேலாங் கடைவீட்டில் தீ; 30 பேர் வெளியேற்றம்

கேலாங் வட்டாரத்தில் உள்ள கடைவீடு ஒன்றில் திங்கட்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட காணொளியில், மூன்று மாடிகளைக் கொண்ட கடைவீட்டின் மேற்கூரையிலிருந்து கரும்புகை வெளியானதைக் காண முடிந்தது.

Remote video URL

இந்தச் தீச்சம்பவம் குறித்து காலை 7.30 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

அந்தக் கடைவீட்டின் மூன்றாவது மாடியில் தீ கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது எனவும் தீ மளமளவெனப் பரவி மேற்கூரை வழியாக அருகில் இருந்த வீடுகளுக்குப் பரவியது எனவும் தெரிவிக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த இடத்திற்கு அருகில் வசிக்கும் 30 குடியிருப்பாளர்களைக் காவல்துறையும் குடிமைத் தற்காப்புப் படையும் வெளியேற்றின.

தீயை அணைக்கும் பணியில் 12 அவசர உதவி வாகனங்கள், தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் நான்கு வாகனங்களுடன் 50 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.

ஒரு மணி நேரத்திற்குள் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. மேலும், இந்தத் தீ விபத்தில் யாரும் காயமடையவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

தீ விபத்துக்கான காரணம் குறித்துக் காவல்துறை விசாரித்து வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!