சாங்கி விமான நிலையத்தில் மின் சிகரெட்டுகளுடன் 177 பேர் பிடிபட்டனர்

சாங்கி விமான நிலையத்தில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் மொத்தம் 177 பேர் மின் சிகரெட்டுகளுடன் பிடிபட்டனர்.

சுகாதார அறிவியில் ஆணையமும் குடிநுழைவுச் சோதனைச்சாவடி ஆணையமும் நான்கு நாள்கள் அந்தச் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டன.

பிடிபட்ட 177 பேரில், 61 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மற்றவர்கள் தங்களுக்கு மின் சிகரெட்டுகள் இருந்ததைத் தெரியப்படுத்தி அவற்றை வீசியதால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சு, சுகாதார அறிவியல் ஆணையம், குடிநுழைவுச் சோதனைச்சாவடி ஆணையம் ஆகியவை வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

சோதனை நடவடிக்கைகள் டிசம்பர் 20, 23, 27, 30ஆம் தேதிகளில் மேற்கொள்ளப்பட்டன.

உச்சப் பயணக் காலத்தின்போது விமான நிலையம் வழி மின் சிகரெட்டுகளைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளைத் தடுப்பதற்காக அவை நடத்தப்பட்டன.

சோதனை நடவடிக்கையின்போது சாங்கி விமான நிலையத்தின் நான்கு முனையங்களையும் சென்றடைந்த பயணிகளை அதிகாரிகள் கண்காணித்தனர்.

அதிகப் பயணிகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில், சிங்கப்பூரில் மின் சிகரெட்டுகள் தடைசெய்யப்பட்டுள்ளதைக் காட்டும் பதாகைகளும் மின்னிலக்கத் திரைகளும் வைக்கப்பட்டிருந்தன.

மின் சிகரெட்டுகள் வைத்திருப்போர், பயன்படுத்துவோர் அல்லது வாங்குவோருக்கு $2,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!