அண்மைய

ஹைதராபாத்: நான்கு பிள்ளைகள் இருந்தும் இறந்துபோன தாயின் உடலை அடக்கம் செய்வதற்கு எந்தப் பிள்ளையும் முன்வரவில்லை. மாறாக அம்மா வைத்திருந்த சொத்துகளை பங்கு பிரித்தால் யாருக்கு எந்தச் சொத்து என்பதில் வாக்குவாதம். அதனால், அந்தத் தாயின் உடல் மூன்று நாள்களாக தெருவில் கிடந்த பரிதாபச் சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டிற்கு அழைப்பு வந்தால் தாம் அங்கு செல்வது உறுதி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஈசூன் அணை அருகே உள்ள சாலை சந்திப்புகளை நிலப்போக்குவரத்து ஆணையம் 2026ஆம் ஆண்டுக்குள் விரிவுபடுத்தவுள்ளது.
காபூல்: ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழை, கரைபுரண்டோடிய வெள்ளம் காரணமாக குறைந்தது 47 பேர் மாண்டுவிட்டதாக அந்நாட்டு அதிகாரி ஒருவர் மே 19ஆம் தேதியன்று தெரிவித்தார்.
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் இன்று வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில், பயங்கரவாதிகள் அடுத்தடுத்து இரட்டைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.