சிங்கப்பூரில் பதின்ம வயதினர் குறைவாகவே வாசிக்கிறார்கள், வயதாகும்போது பலரும் வாசிப்பதை அறவே விட்டுவிடுகிறார்கள். சிங்கப்பூர் இளையர்களின் வாசிப்புப் பழக்கம் குறித்து தேசிய கல்விக் கழகம் 2021இல் நடத்திய ஆய்வில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களில் குறைந்த விழுக்காட்டினரே நூல் வாசிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரியவந்துள்ளது.
பதின்ம வயதினர் கைப்பேசியில் அதிக நேரத்தைச் செலவிடுவதால் வாசிப்பதில் ஆர்வமில்லை என்பது எப்போதும் உண்மையல்ல என்பதையும் ஆய்வு குறிப்பிட்டுள்ளது. வாசிப்பில் ஆர்வமுள்ளவர்கள் நூல்களையும் மின்நூல்களையும் வாசிக்கிறார்கள்.
ஒவ்வொருநாளும் சில நிமிடங்களாவது வாசிப்பது வாழ்வில் பெரும் பயனைத் தரும்.
1. மூளைக்கான மனத் தூண்டுதல்
ஒவ்வொருநாளும் வாசிக்கும்போது, மனச் செயல்பாடு தூண்டப்படுகிறது.
2. மன அழுத்தம் குறையும்
மனதைத் திசைதிருப்ப ஏதாவது செய்யாவிட்டால் அன்றாடக் கவலைகள் தொந்தரவு செய்யும். வாசிப்பு மிகவும் சுவாரஸ்யமான ஒன்றைத் தொடங்குவதற்கு மன அமைதியைத் தருகிறது.
3. பரந்துபட்ட அறிவு
நூல் வாசிப்பின்மூலம் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம்.மாறுபட்ட வாழ்க்கை அனுபவங்களைப் பெறலாம். பல்வேறுபட்ட மனிதர்களையும் குணாதிசயங்களையும் அறிந்துகொள்வதன் மூலம், வாழ்க்கைச் சிக்கல்களை எளிதாக எதிர்கொள்ள முடியும்.
4. சொல் வளம்
வாசிக்கும் பழக்கத்தால் சொல் வளமும் மொழி வளமும் பெருகும்.
5. நினைவாற்றல் மேம்படும்
வழக்கமான வாசிப்பு மூளைக்குச் சிறந்த பயிற்சியாகும். கற்பனைப் புனைவுகளைப் படிக்கும்போது மூளை பல்வேறு கதாபாத்திரங்களின் பெயர்கள், இயல்புகளை நினைவில் வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இது நினைவாற்றலை வளர்க்கிறது.
6. பகுப்பாய்வு சிந்தனை
ஒவ்வொருநாளும் வாசிப்பதன் நன்மைகளில் ஒன்று, பகுப்பாய்வுத் திறன் மேம்படுவது.
7. கவனமும் செறிவும் மேம்படும்
தொழில்நுட்பம் செய்த மோசமான செயல்களில் ஒன்று மூளையைச் சோம்பேறியாக்கியது. சிக்கல்களைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவதற்கு வாசிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.
8. அமைதி
தனிமையில் சிறிது நேரம் செலவழிக்க வாசிப்பு உதவும். அலைக்கழிக்கும் மனதை அமைதிப்படுத்தும்.