ரியோ டி ஜெனிரோ: கடந்த சில உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிகளில் பிரேசிலின் செயல்பாடு ஏமாற்றம் தரும் வகையில் இருந்தது.
இம்முறை கத்தாரில் நடை பெறும் போட்டியில் எப்படியாவது மீண்டும் முத்திரை பதிக்க வேண்டும் என்று பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மார் தீவிரம் காட்டி வருகிறார்.
உலகக் கிண்ணத்தை பிரேசில் ஏந்த வேண்டும் என்று அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பு களை ஏற்று, சுமைதாங்கியாய் களமிறங்கத் தயாராக இருப்பதாக நெய்மார் கூறினார்.
இதற்காக நீண்டகாலமாகவே பயிற்சி செய்து உடல் அளவிலும் மனதளவிலும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.