ஜார்ஜ் ஓர்வெல் 1945ஆம் ஆண்டில் எழுதிய 'எனிமல் ஃபார்ம்' எனும் புகழ்பெற்ற கதையைத் தமிழில் மேடையேற்ற உள்ளனர் சிங்கப்பூரின் 'அகம் தியேட்டர் லேப்' குழுவினர்.
இவர்களின் படைப்பு, கலாசாரப் பதக்கம் பெற்ற பி.கிருஷ்ணனின் நாடகத்தை மையமாகக் கொண்டது. பி.கிருஷ்ணனின் நாடகத்தின் ஒரு பகுதி 1971ல் வானொலியில் இரண்டு மணிநேர நாடகமாக ஒலிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எனவே, நாடகத்தை முழுமையாக மேடையில் அரங்கேற்றுவது இதுவே முதல்முறையாகும்.
'அகம்' நிறுவனர் சுப்ரமணியம் கணேஷ், வசனத்தை மாற்றியமைத்த கார்த்திகேயன் சோமசுந்தரம் ஆகியோர் நாடகத்தை இயக்கியுள்ளனர்.
நாடகம் இம்மாதம் 17, 18, 19 ஆகிய தேதிகளில் எஸ்பிளனேட் தியேட்டர் ஸ்டூடியோவில் அரங்கேறும். $35 நுழைவுச்சீட்டுகளுக்கு 'சிஸ்டிக்' நிறுவனத்தை அணுகலாம்.