பாரதி கண்ணம்மா தொடர் நாடகத்தில் நடித்துவருகிறார் ஃபரினா ஆசாத். நிகழ்ச்சித் தொகுப்பாளர், மாடலிங், நடிப்பு என தொடர்ந்து சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வரும் ஃபரினா, தனது கூந்தல் பராமரிப்பு ரகசியம் குறித்து ஐபிசி மங்கை யூடியூப் ஒளிவழியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
முதலில் தனது கூந்தல் குறித்து பேசிய ஃபரினா, நீளமான கூந்தல் எனக்கு மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது. என்னுடைய ஆடை ஏதாவது அசௌகரிய மாக இருப்பதுபோல் உணர்ந்தால், முடியை எடுத்து முன்புறம் போட்டுக்கொள்வேன். அது துப்பட்டா போல் எனக்கு பாதுகாப்பு கொடுக்கும் என்கிறார்.
தொடர்ந்து, கூந்தல் பராமரிப்புக்கு அவர் சில உதவிக் குறிப்புகளையும் கூறினார். "நான் வாரத்தில் இரண்டு நாள்கள் தலைக்கு எண்ணெய் வைத்துக்கொள்வேன். மூலிகை எண்ணெய்தான் பயன்படுத்துவேன். அதன்பிறகு 'ஷாம்பூ' போட்டு கூந்தலைக் கழுவி, கண்டிஷனர் போடுவேன்.
"எல்லா நாள்களிலும் தலை குளிக்கக் கூடாது. வாரத்துக்கு மூன்று முறை தலை குளித்தாலே போதும். எண்ணெய் வைப்பதால் வறண்ட முடி, மிருதுவாக மாற ஆரம்பிக்கும்.
"அதேபோல, தினமும் தலைக்கு எண்ணெய் வைக்கவும் கூடாது. அப்படி செய்தால் அழுக்கு தலையில் படிந்துவிடும். அதனால், வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை எண்ணெய் வைக்கலாம். இதுதான் முடியைப் பராமரிக்க முதல் விஷயம்.
"அடுத்ததாக சிலர் கூந்தலை அடிக்கடி சீவிக்ெகாண்டே இருப்பார்கள். அப்படியும் செய்யக் கூடாது. ஓரிரண்டு முறை சீவியபிறகு, அப்படியே விட்டுவிட வேண்டும்.
"இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது முடியைத் தூக்கிக் கட்டாமல் அப்படியே தளர விட்டுச் செல்லவும் கூடாது. இதெல்லாம் அவசியம் நாம் பின்பற்ற வேண்டும்.
"இதற்கும் மேலாக, உச்சந்தலையில் எண்ணெய் வைத்து 'மசாஜ்' செய்யலாம்.
"வீட்டில் எண்ணெய் தயாரிக்க உங்களுக்கு நேரமில்லை எனில், கடையிலிருந்து பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், ேதங்காய் எண்ணெய் ஆகிய மூன்றையும் வாங்கி வந்து அதில் 'வைட்டமின் ஈ' மாத்திரையை நன்றாகக் கலந்து தலைக்கு வைத்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
"அத்துடன், 'பீர்' மதுபானம் கொண்டு தலைமுடியைக் கழுவினால் முடி மிருதுவாக இருக்கும். முதலில் பீரை கூந்தலில் தேய்த்து, பிறகு ஷாம்பூ கொண்டு கழுவவேண்டும். அதேபோல முட்டையும் பயன்படுத்தலாம்.
"சின்ன வெங்காயம் சாறு அல்லது நன்கு மைய அைரத்த கூழை தலையின் முடி குறைவாக இருக்கும் பகுதிகளில் பயன்படுத்தலாம். இதில் மிக முக்கியமாக 10 நிமிடங்களுக்கு மேல் இதை தலையில் வைத்திருக்கக் கூடாது. அப்படி வைத்திருந்தால் சளி, காய்ச்சல் வரும்.
"இதைத்தொடர்ந்து செய்து வர புதிய முடி வளர ஆரம்பிக்கும். அதேபோல சாப்பிடும்போது கறிவேப்பிலையை ஒதுக்கி வைக்கக் கூடாது. அது கூந்தலுக்கு ரொம்ப நல்லது," என பல யோச னைகளை ஃபரினா காணொளி யில் பகிர்ந்துள்ளார்.