இந்தியா

பெங்களூரு: கர்நாடகா மாநிலம், ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாசக் காணொளிகளை வெளியிட ரூ.100 கோடி தருவதாக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தன்னிடம் பேரம் பேசியதாக வழக்கறிஞரும் பாஜக தலைவருமான ஜி.தேவராஜே கவுடா குற்றஞ்சாட்டி இருந்தார். இந்தப் புகாருக்கு மறுப்பு தெரிவித்து பதிலடி தந்துள்ளார் டி.கே.சிவகுமார்.
ஹைதராபாத்: நான்கு பிள்ளைகள் இருந்தும் இறந்துபோன தாயின் உடலை அடக்கம் செய்வதற்கு எந்தப் பிள்ளையும் முன்வரவில்லை. மாறாக அம்மா வைத்திருந்த சொத்துகளை பங்கு பிரித்தால் யாருக்கு எந்தச் சொத்து என்பதில் வாக்குவாதம். அதனால், அந்தத் தாயின் உடல் மூன்று நாள்களாக தெருவில் கிடந்த பரிதாபச் சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் இன்று வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில், பயங்கரவாதிகள் அடுத்தடுத்து இரட்டைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
பெங்களூர்: பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் - அக்‌ஷதா தம்பதியர் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 275வது இடத்தில் இருந்து 245வது இடத்திற்கு முன்னேறியுள்ளனர்.
புதுடெல்லி: டெல்லியில் காங்கிரஸ் வேட்பாளர் கன்னையா குமார் தாக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.