சத்தீஸ்கர் வனப்பகுதியில் ஏழு நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயண்பூர், கான்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத் என்ற வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரு பெண்கள் உள்பட ஏழு நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஒரு ஏகே 47 துப்பாக்கி உட்பட ஏராளமான ஆயுதங்களும் வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் கொல்லப்பட்ட நக்சலைட்டுகளின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் சம்பந்தப்பட்ட பகுதியில் தேடுதல் பணி இன்னும் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அபுஜ்மத் வனப்பகுதி நக்சலைட்டுகளின் கோட்டையாக இருந்து வருவதாகவும் இதனால் அப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே அடிக்கடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அந்தவகையில் கடந்த 15 நாட்களில் நக்சலைட்டுகள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய இரண்டாவது பெரிய தாக்குதல் இதுவாகும்.

இந்தச் சம்பவத்துடன் சேர்த்து பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் இந்த ஆண்டு இதுவரை 88 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!