பெங்களூரு: கர்நாடகாவின் பெல்லாரி நகரில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் ரூ 5.60 கோடி மதிப்பிலான ரொக்கம், 3 கிலோ தங்கம், 103 கிலோ வெள்ளி நகைகள், 68 வெள்ளிக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைப்பற்றப்பட்ட மொத்த நகைகளின் மதிப்பு ஏறக்குறைய ரூ.7.60 கோடி வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 19ம் தேதி முதல் நாடாளுமன்றத் தேர்தல் துவங்க உள்ள நிலையில், நாடு முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நகைக்கடை உரிமையாளரான நரேஷின் வீட்டில் இருந்து அதிக பணம், நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக திங்கட்கிழமை (ஏப்ரல் 8) தெரிவித்த காவல்துறை, விசாரணையில் கிடைத்த தகவல்கள், வருமான வரித்துறைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறியது.