மருத்துவமனை வாயிலில் குழந்தையைப் பெற்றெடுத்த தாய்: மருத்துவர்கள் மூவர் பணி இடைநீக்கம்

ஜெய்ப்பூர்: ஜெப்பூரில் உள்ள கன்வாடியா அரசு மருத்துவமனைக்கு கடந்த புதன்கிழமை ராஜஸ்தானைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவர் வந்துள்ளார். அவருக்குப் பிரசவம் பார்க்க முடியாது என மருத்துவர்கள் கைவிரித்து விட்டதை அடுத்து, செய்வதறியாது திகைத்த அந்தக் கர்ப்பிணி மருத்துவமனை நுழைவு வாயிலில் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

இவ்விவகாரம் அங்குள்ள சுகாதாரத் துறை உயர் அதிகாரிகளுக்குத் தெரியவந்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட மூன்று அரசு மருத்துவர்களும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதுகுறித்து மருத்துவக் கல்வி கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரா சிங் கூறுகையில், “இந்த தகவலைக் கேள்விப்பட்டதும் உடனடியாக விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

“அக்குழு அளித்த அறிக்கையின்படி மருத்துவர்கள் குசம் சைனி, நேஹா ரஜாவத், மனோஜ் ஆகிய மூன்று மருத்துவர்களும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

“அத்துடன், அலட்சியமாக செயல்பட்டதற்காக மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜேந்திர சிங் தன்வருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது,” என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!