பெங்களூரு: சென்னை-மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்தப் பாதையில் மேலும் ஒரு வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்படுவதாக இந்திய ரயில்வே அமைச்சு அறிவித்துள்ளது.
தற்போது செயல்படும் வந்தே பாரத் ரயில் சென்னையில் இருந்து புறப்பட்டு மைசூருக்கு வருகிறது. புதிய வந்தே பாரத் ரயில் மைசூருவில் இருந்து புறப்பட்டு சென்னை செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் ஏப்ரல் 4ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கும்.
இந்த ரயில் புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயங்கும். இது மைசூருவில் காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.20 மணிக்கு சென்னை சென்றடையும். மைசூரு ரயில் நிலையத்தில் இந்த ரயிலுக்கு பராமரிப்பு வசதிகள் செய்யப்படும் வரை இந்த ரயில் பெங்களூரு-சென்னை இடையே இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.