நிலவில் சந்திரயான்-3 இறங்குகலத்தைத் தொடா்புகொண்ட நாசா விண்கலம்

புதுடெல்லி: இந்தியாவின் சந்திரயான்-3 திட்டத்தின் விக்ரம் இறங்குகலத்தை நிலவைச் சுற்றிவந்தபடி ஆய்வு செய்துகொண்டிருக்கும் அமெரிக்க விண்கலம் தொடா்புகொண்டிருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தகவல் வெளியிட்டுள்ளது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.

அதில் இடம்பெற்றிருந்த விக்ரம் இறங்குகலமும், பிரக்யான் ரோவரும் திட்டமிட்டபடி 14 நாள்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டன.

பின்னா், நிலவில் சூரியன் மறைந்ததால், விக்ரம் இறங்குகலம், ரோவா் ஆகியவை உறக்க நிலைக்கு கொண்டுசெல்லப்பட்டன. சூரிய ஒளி மீண்டும் வந்த பின்னா் அவற்றை மீண்டும் தொடா்புகொள்ள இஸ்ரோ மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.

இந்நிலையில், நிலவை சுற்றிவந்தபடி ஆய்வு மேற்கொண்டு வரும் நாசாவின் ஆா்பிட்டா் (எல்ஆா்ஓ), சந்திரயான்-3-இன் விக்ரம் இறங்குகலத்தைத் தொடா்புகொண்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!