4 முக்கியத் தலைவர்கள் வர மறுப்பு: ‘இண்டியா’ கூட்டணிக்குப் பின்னடைவு

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணிக் கூட்டம் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் வீட்டில் புதன்கிழமை (டிசம்பர் 6) நடக்க இருந்தது. அந்தக் கூட்டத்தில், 2024 மக்களவைத் தேர்தலுக்கான வியூகம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி தலைவர்கள் முடிவு செய்திருந்தனர்.

ஆனால், இந்தக் கூட்டத்தில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் கலந்துகொள்ள மாட்டார்கள் என அந்தக் கட்சிகளின் வட்டாரங்கள் தெரிவித்தன.

புயல் நிலவரம் காரணமாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் உடல்நலக்குறைவால் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாது என்று தகவல் வெளியானது.

மூன்று மாநிலங்களில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து காங்கிரசுடன் சில இண்டியா கூட்டணிக் கட்சிகளுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதன் காரணமாக சில தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில், இண்டியா கூட்டணியின் கூட்டம் டிசம்பர் 3வது வாரத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

தொடங்கி ஆறு மாதங்களே ஆன நிலையில் இண்டியா கூட்டணி பெரும் பின்னடைவைச் சந்தித்து உள்ளதாகப் பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!