ஆம்பூர்: விவசாய நிலத்தில் காட்டுப்பன்றிகள் புகுந்து சேதப்படுத்துவதைத் தடுக்கவும் அவற்றைப் பிடிப்பதற்காகவும் கள்ளத்தனமாகப் போடப்பட்டிருந்த மின்வேலியில் ஓர் இளையர் உட்பட இருவர் சிக்கி உயிரிழந்தனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தார்வழி பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
நள்ளிரவு 12 மணியளவில் தீவனப் பயிர்களை மேய்வதற்காக ஒரு மாடு விவசாய நிலத்தில் புகுந்ததை அடுத்து, அந்த மாட்டை விரட்டுவதற்காகச் சென்ற ஜெயக்குமார், 52, வெங்கடேசன், 22, ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
இறந்துபோன வெங்கடேசனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்திருந்த பெற்றோர், பெண் பார்க்கச் செல்ல இருந்த நிலையில் மின்வேலியில் சிக்கி அவர் உயிரிழந்தார்.