ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தில் டூப்ரான் அருகே பயிற்சி விமானம் ஒன்று திங்கட்கிழமை பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.
அப்போது, அந்த விமானம் பறந்துகொண்டிருந்தபோதே விபத்துக்குள்ளானது. அந்த விமானம் பாறைகளுக்கு இடையே நொறுங்கி விழுந்ததும் தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் அந்த விமானத்தில் இருந்த 2 விமானிகள் உயிரிழந்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விமான விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.