கோல்கத்தா: டார்ஜிலிங்கில் பாதிரியாராக உள்ளார் திமோதி ஜோஷி. அவர் நாகலாந்தை சேர்ந்த பெண் ஒருவரை ஏமாற்றி ரூ. 3.5 கோடி மோசடி செய்துள்ளார்.
திமோதி அதிர்ஷ்டம் தரக்கூடிய மந்திரப் பெட்டி ஒன்றை வாங்கித் தருவதாகக் கூறி அப்பெண்ணை நம்பவைத்துள்ளனர். அதற்காக பாதிரியார் வழங்கிய பல்வேறு வங்கிக் கணக்குகளில் 3.5 கோடி ரூபாய் பணத்தினை அப்பெண் செலுத்தியுள்ளார்.
ஏமாற்றுவதற்கு ஒரு பெட்டியை தயாரித்து பெண்ணிடம் வழங்கியுள்ளார் திமோதி. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அப்பெண் காவல்துறையில் புகார் அளித்தார். அதன் பின் திமோதி கைது செய்யப்பட்டார்.