ஆட்டோவில் இருந்து தூக்கி வீசப்பட்ட பள்ளிக் குழந்தைகள்

ஹைதராபாத்: ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு சாலையின் சந்திப்பில் அதிவேகமாக வந்த ஆட்டோ, எதிரே வந்த லாரிமீது மோதாமல் இருப்பதைத் தவிர்க்க முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்து பயங்கரமாக மோதி தலைக்குப்புறக் கவிழ்ந்தது.

இதில் ஆட்டோவில் இருந்த எட்டு பள்ளிக் குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர்.

நால்வர் பெரிய அளவில் காயமின்றி தப்பினர். மூன்று குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர். ஒரு பெண் குழந்தை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது என்று காவல் துணை ஆணையாளர் சீனிவாச ராவ் தெரிவித்தார்.

இந்த விபத்து குறித்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ லாரி வருவதைக் கவனிக்காமல் வேகமாகச் சென்று லாரியின் மீது மோதி தூக்கி வீசப்படுகிறது. இந்த சிசிடிவி காட்சியானது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. லாரி ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!