ஹைதராபாத்: தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு, சித்திபேட்டை மாவட்டத்தின் கோனய்யபல்லி கிராமத்தில் உள்ள வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்குச் சென்று பெருமாள் பாதத்தில் வேட்பு மனுவை வைத்துவிட்டு, சிறப்பு வழிபாடுகள் செய்த பின்னர் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் வேட்பு மனுவை தாக்கல் செய்வது வழக்கம்.
இதன்படி சனிக்கிழமை தனது மருமகன் ஹரீஷ் ராவ், கட்சி நிர்வாகிகள், வேட்பாளர்கள் சிலருடன் முதல்வர் சந்திர சேகர ராவ், சித்திபேட்டை ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்குச் சென்றார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 100 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி ஆட்சி அமைப்போம் என அவர் உறுதியாகக் கூறி வருகிறார்.
அங்கு அவர் சிறப்பு வழிபாடுகள் நடத்தி, வேட்பு மனுவை பெருமாளின் காலில் வைத்து வழிபட்டார்.