கணவரைப் பிரிந்த மகளை மேளதாளத்துடன் வரவேற்ற தந்தை

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் உள்ள பிரேம் குப்தா என்பவர் தனது மகள் சாக்‌ஷி குப்தாவை மாமியார் வீட்டிலிருந்து அழைத்து வந்து கொண்டாடியிருக்கிறார்.

மாமியார் வீட்டில் சாக்‌ஷி அவரது கணவர் மற்றும் அவரது பெற்றோரால் துன்புறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

கணவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் நடந்தது சாக்‌ஷிக்குத் தெரிய வந்தது.

இதையடுத்து, சாக்‌ஷி தனது கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்தார்.

வீடு திரும்பும் சாக்‌ஷியை அவரது தந்தை மிகுந்த கண்ணியத்துடன் வரவேற்க முடிவு செய்தார்

அக்டோபர் 15ஆம் தேதி நவராத்திரி முதல் நாளன்று திரு குப்தா பஜ்ராவில் உள்ள தனது மகளின் மாமியார் வீட்டுக்குச் சென்றார். அங்கிருந்து மேள தாளங்கள் முழங்க, வாணவேடிக்கைகளுடன் தமது வீட்டுக்கு மகளை அழைத்து வந்தார்.

திருமண விழாவுக்கு ஏற்பாடு செய்வதுபோல மகள் வீடு திரும்பும் நிகழ்ச்சியை உற்றார் உறவினர்கள் சூழ திரு குப்தா கொண்டாடினார்.

இந்த நிலையில் ராஞ்சியில் உள்ள தனது வீட்டிற்கு மகள் திரும்பிய காணொளியை திரு குப்தா சமூக ஊடகத்தில் பதிவிட்டார். அவரது காணொளி சமூக ஊடகங்களில் பரவியது.

அந்தக் காணொளியில் மகள்களை மதிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அவர் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!