மும்பையில் மதம் மாறி மணமுடித்த தம்பதி ஆணவக்கொலை

மும்பை: மதம் மாறி திருமணம் செய்த மகளை அவரது கணவருடன் ஆணவக் கொலை செய்த பெண்ணின் தந்தை, சகோதரன் உள்பட 3 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

கடந்த சனிக்கிழமை மும்பை மான்கூர்டு பகுதியில் உள்ள கிணற்றில் இளையர் ஒருவரின் பிணம் மிதந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். உடலை கைப்பற்றி காவல்துறை விசாரணை மேற்கொண்டதில், அந்த இளையர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்தநிலையில் கடந்த திங்கட்கிழமை நவிமும்பை பன்வெல் பகுதியில் புதருக்குள் அடையாளம் தெரியாத இளம்பெண் ஒருவரின் உடல் கிடந்தது. தகவலின் பேரில் விரைந்து சென்ற பன்வெல் காவல்துறை உடலை கைப்பற்றி உடற்கூர் ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பெண்ணும் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இரண்டு பேரும் ஒரே மாதிரி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு இருப்பதால், அவர்கள் காதலர்கள் அல்லது கணவன்-மனைவியாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகித்தனர். இதையடுத்து நடத்திய விசாரணையில், கொலையான பெண் மும்பை கோவண்டி பகுதியை சேர்ந்த கோரா கான் (வயது 50) என்பவரின் மகள் குல்னாஸ் என்பது தெரியவந்தது.

இதையடுத்து கோரா கானை பிடித்து காவல்துறை அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். அவரிடம் நடத்திய விசாரணையில் குட்டு அம்பலமானது. அதாவது, அவரது மகள் குல்னாசை உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த கரண் ரமேஷ் சந்திரா ( வயது 22) என்ற இளையர் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்தது தெரியவந்தது. தனது மகள் வேறு மதத்தவரை திருமணம் செய்ததை கோரா கானால் ஏற்றுக்கொள்ள முடியாததால் அவர்களைக் கொலை செய்தது தெரியவந்தது.

இதற்கிடையே காதல் திருமணம் செய்த தம்பதி உத்தரப்பிரதேசத்தில் வசித்து வந்தனர். அண்மையில், கோரா கான் அவர்களைத் தொடர்புகொண்டு அன்பாகப் பேசியுள்ளார். மகள், மருமகன் ஆகிய இருவரையும் மும்பைக்கு வரும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி அவர்களும் மும்பைக்கு வந்தனர்.

பின்னர் தனது மகன் சல்மான் மற்றும் சல்மானின் நண்பர் முகமது கான் ஆகியோருடன் சேர்ந்து மகள் குல்னாசையும், மருமகன் கரண் ரமேஷ் சந்திராவையும் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

இந்த படுகொலையை மறைப்பதற்காக அவர்கள் கரண் ரமேஷ் சந்திரா உடலை மும்பை மான்கூர்டில் உள்ள கிணற்றிலும், குல்னாஸ் உடலை நவிமும்பை பன்வெல் காட்டுப்பகுதியிலும் வீசியது தெரியவந்தது.

இதையடுத்து காவல்துறையினர் கோரா கான், சல்மான், முகமது கான் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இவர்களுக்கு உதவியதாக 3 சிறுவர்களையும் பிடித்து காவல்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட அனைவரும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இந்த ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!