கர்நாடகா: தமிழகத்திற்கு 10 டிஎம்சி தண்ணீர்

பெங்களூரு: தமிழ்நாட்டிற்கு 10 டிஎம்சி தண்ணீர் தர கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். 

வறட்சி ஏற்பட்டுள்ள காலத்தில் இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்சினை வேண்டாம். போதுமான மழை பெய்தால் தேவையான நீர் வெளியேற்றப்படும். 

மேக்கேதாட்டுவில் அணை கட்ட ஒப்புதல் தந்தால் தமிழ்நாட்டிற்கு கூடுதலாகவே தண்ணீர் திறக்க முடியும். கடந்த ஆண்டு 400 டிஎம்சி உபரி நீர் வீணாக கடலில் சென்றது. அணை இருந்தால் தேக்கி வைத்திருக்கலாம். தமிழகத்திற்கு இப்போது 10 டி.எம்.சி. தண்ணீர் திறக்க அரசு முடிவு செய்துள்ளது என்று அவர் தெரிவித்தார். 

எனவே, தமிழக நலனுக்காக மேகதாது அணை கட்ட ஒப்புக்கொள்ளுங்கள். அதன் மூலம் இவ்வாறான காலக்கட்டங்களில் தண்ணீர் திறந்து விட முடியும்.

இரு மாநிலங்களும் இந்த விவகாரத்தில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தமிழக விவசாயிகளை துயரத்தில் ஆழ்த்த விரும்பவில்லை. தமிழகமும் கர்நாடக விவசாயிகளை துயரத்தில் ஆழ்த்த வேண்டாம். கர்நாடகா எந்த சண்டையிலும் ஈடுபட விரும்பவில்லை, இரு மாநிலத்தவரும் சகோதரர்கள் போன்றவர்கள் என்றும் அவர் கூறினார்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!