சேலம்: மணமகன் தேவை என்று விளம்பரம் செய்து ஐம்பதுக்கும் மேற்பட்ட இளையர்களை ஏமாற்றிய கும்பல் காவல்துறையிடம் சிக்கியது.
சேலத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் 'மணமகன் தேவை' என்று குறிப்பிட்டு இணையதளத்தில் வந்த ஒரு விளம்பரத்தைப் பார்த்து ஐந்து பேர்கொண்ட இந்தக் கும்பலைத் தொடர்புகொண்டு பேச, அவர்கள் உடனடியாக கேரளா வருமாறு கூறியுள்ளனர்.
மணிகண்டன் அங்கு சென்று பெண் பார்த்து முடித்ததும், உடனடியாக திருமணத்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
மணிகண்டன் அதற்கு சம்மதிக்கவே, அருகே உள்ள கோவிலில் அவருக்கும் சபீதா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமணம் செய்து வைத்த இருவர் தரகர்களாக அறிமுகம் செய்துகொண்டு, தங்களுக்கு 1.5 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று கூற, அதைக் கொடுத்தார் மணிகண்டன்.
பின்னர் மனைவி சபீதாவுடன் அவர் சேலம் திரும்பியபோது, அக்கும்பலைச் சேர்ந்த மற்ற இருவரும் துணைக்கு வருவதாகக் கூறியுள்ளனர்.
சேலம் வந்த இரண்டு நாள்களில், சபீதாவின் தாய்க்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளாகவும், அவரை அழைத்துச் சென்று, ஒரு வாரத்தில் மீண்டும் கொண்டு வருவதாகவும் கூற, மணிகண்டனும் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால் சேலம் சென்ற சபீதாவை அவரால் பின்னர் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. சந்தேகம் அடைந்த அவர் காவல்துறையில் புகார் அளிக்க, மணிகண்டனைப் போலவே அந்தக் கும்பல் இதுவரை ஐம்பதுக்கும் அதிகமான இளைஞர்களை இதே பாணியில் ஏமாற்றி இருப்பது அம்பலமானது.
ஐந்து பேரும் கைதாகி உள்ளனர். விளம்பரம் செய்வது, தேடி வரும் இளையர்களை உடனடியாக திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி பணத்தைப் பறிப்பது, பிறகு தலைமறைவாகிவிடுவது என்பதுதான் இவர்களின் திட்டம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
"பொதுவாக திருமண ஏக்கத்தில் உள்ள இளையர்கள் உடனடியாக திருமணம் செய்ய வேண்டும் என்று கூறும்போது ஒப்புக்கொள்வார்கள். அவர்களின் இந்த ஆர்வத்தைப் பயன்படுத்தி கணிசமான தொகையைக் கேட்டுப் பெறுவோம்.
"திருமணத்துக்குப் பிறகு ஐந்து பேரும் தலைமறைவாகி விடுவோம்கு," என்று காவல்துறையிடம் ஐந்து பேரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.