‘பைக்’கில் சென்றவர் கருநாகம் தீண்டி மரணம்

இந்தூர்: மோட்டார்சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்தவர் கருநாகம் தீண்டியதில் அவ்விடத்திலேயே மயங்கி விழுந்து மாண்டுபோனார்.

இச்சம்பவம் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் மாவட்டத்திலுள்ள தேலி கேடா எனும் சிற்றூரில் நிகழ்ந்தது.

மாண்டுபோன மணீஷ், பாம்பு பிடிப்பதில் கைதேர்ந்தவர் எனக் கூறப்பட்டது.

இச்சம்பவம் கண்காணிப்புப் படக்கருவியில் பதிவானது. அக்காணொளி சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பகிரப்பட்டு வருகிறது.

தம் ஊரில் உள்ள ஒரு மாட்டுத் தொழுவத்தில் கருநாகம் புகுந்துவிட்டதாக மணீஷுக்குத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, தம் நண்பர் ஒருவருடன் அத்தொழுவத்திற்குச் சென்றார் மணீஷ். சில நிமிடங்களில் அவர் அப்பாம்பைப் பிடித்துவிட்டதாகக் கூறப்பட்டது.

பின்னர் அப்பாம்பைக் காட்டில் விட அவர்கள் முடிவுசெய்தனர். நண்பர் பைக்கை ஓட்ட, தம் இரு கைகளால் பாம்பைப் பிடித்தபடி பின்னால் அமர்ந்திருந்தார் மணீஷ்.

ஓரிடத்தில் வண்டியை நிறுத்தியதும், பாம்பு மணீஷைக் கொத்திவிட்டது. உடனே அவர் கீழே விழுந்துவிட்டார். அதிர்ச்சி அடைந்த மணீஷின் நண்பர், அவரைச் சோதித்தபோது, அவரது உயிர் ஏற்கெனவே பிரிந்திருந்தது.

மணீஷைப் பாம்பு இருமுறை கொத்தியிருக்க வேண்டும் என்று உள்ளூர்வாசிகள் கூறினர்.

இந்தூரைச் சுற்றிய காட்டுப் பகுதிகளில் கருநாகங்களும் வேறு நச்சுப் பாம்புகளும் மிகுதியாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!