உலகப் பங்குச்சந்தை தரவரிசையில் 4வது இடத்தைப் பிடித்தது இந்தியா

மும்பை: உலகப் பங்குச் சந்தையில் ஹாங்காங்கின் இடத்தை முதன்முறையாக இந்தியப் பங்குச்சந்தை பிடித்துள்ளது.

இந்தியப் பங்குச்சந்தையின் மதிப்பு 4.33 டிரில்லியன் அமெரிக்க டாலராக (S$5.8 டிரில்லியன்) அதிகரித்ததன் மூலம், 4.29 டிரில்லியன் அமெரிக்க டாலராக இருந்த ஹாங்காங் பங்குச்சந்தையை அது பின்னுக்குத் தள்ளி நான்காவது இடத்திற்கு முன்னேறியதாகத் புளூம்பெர்க் நிறுவனம் திரட்டிய தரவுகளின்வழி தெரியவந்துள்ளது.

வளர்ச்சி வாய்ப்புகளும் கொள்கைச் சீர்திருத்தங்களும் அதன் முதலீட்டுத் தகுதியை உயர்த்தியுள்ள நிலையில், இந்தியா இச்சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இந்தியப் பங்குச்சந்தை 4 டிரில்லியன் அமெரிக்க டாலர் வரம்பை முதல் முறையாக 2024ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதியன்று கடந்தது.

சீனாவின் ஆக செல்வாக்குமிக்க, புத்தாக்கத் திறனுடைய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ள ஹாங்காங் பங்குச் சந்தை, வரலாறு காணாத அளவுக்குச் சரிவைச் சந்தித்துள்ள வேளையில் இந்தியப் பங்குச்சந்தை தொடர்ந்து முன்னேறி வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!