ஆர்த்தி சிவராஜன்
சித்திரைப் புத்தாண்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக இடம்பெற்று வருவதை கண்டு மகிழ்ச்சி அடைவதாகவும் தமிழ் மொழி தொடர்ந்து சிங்கப்பூரில் வாழும் மொழியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அனைத்து சமூக அமைப்புகளும் ஈடுபட்டு வருவதாகவும் தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தெரிவித்தார்.
"தற்போது லிட்டில் இந்தியாவில் உள்ள தொழில் முனைவர்கள் அனைவருமே கொவிட்-19 சூழ் நிலைக்கு ஈடுகொடுத்து வித்தியாசமான முறையில் வியாபாரத்தைத் தொடர்ந்து நடத்தி வருவதை பார்த்து நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அதே நேரத்தில், பொருளியலுக்கு அப்பாற்பட்டு, நம் கலாசாரங்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளையும், நம் மொழி மற்றும் பாரம் பரியம் தொடர்பான நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து நடத்த வேண்டும்," என்றார் திரு ஈஸ்வரன்.
'லிஷா' எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் இம்மாதம் 15ஆம் தேதி நடத்திய தமிழும் இசையும் என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இவ்வாறு பேசினார் அமைச்சர் ஈஸ்வரன்.
@Officiallishasg என்ற லிஷாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்நிகழ்ச்சி மெய்நிகராக ஒளிபரப் பானது. இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவளித்த 28 பங்காளிகளுக்கு அமைச்சர் ஈஸ்வரன் விருதுகளை வழங்கினார். அவர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அன்பளிப்பை வழங்கியது லிஷா. 'டயாஜியோ' (Diageo) நிறுவனத்தில் அனைத்துலக ரீதியில் வணிகச் சின்ன நிர்வாகியாகப் பணியாற்றும் ஜெயசுதா சமுத்திரன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
கவிஞர் வாலியின் படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு வகையான பாடல்களும் நடனங் களும் நடைபெற்றன. திருமதி ஜெயசுதா, பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் கவிஞர் வாலி பற்றிய பல சுவாரசியமான விவ ரங்களைப் பகிர்ந்தார். வெவ்வேறு உள்ளூர் கலைஞர்கள் திறமைகளை வெளிப்படுத்தி கவிஞர் வாலியின் படைப்புகளுக்கு உயிரூட்டினர்.
இவ்விழாவிற்கு ஆதரவு வழங்கிய அரசாங்கத்திற்கும் அனைத்து வணிக நிறுவனங் களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்ட லிஷாவின் தலைவரான திரு சி. சங்கரநாதன், "கடந்த ஆண்டு இந்த விழாவை நடத்த முடியவில்லை. இந்த ஆண்டு நிச்சயமாக நடத்த வேண்டும் என்ற முடிவை எடுத்தேன்," என்றார்.
"நிதிப்பற்றாக் குறையின் காரணமாக கிட்டத்தட்ட 90 பேரை தொடர்பு கொண்டேன். அனை வரும் இந்த விழாவிற்கு ஆதரவு அளிக்க உறுதியளித்தனர். சில சீன வணிகர்களும் ஆதரவு வழங் கியது மிகவும் உற்சாகமாக இருந் தது," என்றும் அவர் தெரிவித்தார்.