விமர்சனங்களைக் கண்டுகொள்வது இல்லை: ஷோபிதா

தீவிர சினிமா ரசிகர்களுக்கு ஷோபிதா துலிபாலா குறித்து நன்கு தெரிந்திருக்கும். மற்றவர்களுக்காக அவரைப் பற்றிய சிறு குறிப்பு.

தமிழில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ‘வானதி’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சோபிதா. பல்வேறு தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். ஹாலிவுட் திரையுலகையும் இவர் விட்டுவைக்கவில்லை.

‘மங்கி மேன்’ என்ற ஆங்கிலப்படத்தில் நடித்து முடித்துள்ளாராம். சோபிதாவும் நடிகர் நாகசைத்தன்யாவும் காதலிப்பதாக அண்மையில் ஒரு தகவல் வெளியானது. மேலும் இருவரும் ரகசியமாக சந்தித்துக் கொள்ளும் சில புகைப்படங்களும் ஊடகங்களில் வெளியாகின. இதையடுத்து நடிகை சமந்தாவின் ரசிகர்கள் சோபிதா குறித்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் காதல் மீது தமக்கு மிகுந்த மரியாதை உள்ளது என அண்மைய பேட்டியில் தெரிவித்துள்ளார் சோபிதா.

“என்னைப் பொறுத்தவரை காதல் என்பது மிக உன்னதமான அனுபவம். அதனால் நான் எப்போதுமே காதல் வயப்பட்டுத்தான் இருப்பேன். எனது வாழ்க்கையில் காதல் முக்கிய அங்கம் வகிக்கிறது.

“என்னைப் பார்த்தால் கடுமையாக இருப்பதுபோல் எண்ணத் தோன்றும். எப்போதுமே எனது எண்ணங்கள் சுதந்திரமானதாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். இதுவரை நான் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரங்கள் கூட அப்படிப்பட்டவையாகத்தான் இருக்கும் என்கிறார் ஷோபிதா.

எனினும் நிஜ வாழ்க்கையில் மாற்றங்களும் அவ்வப்போது ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ள அவர், எப்போதும் மற்றவர்களைச் சார்ந்தே வாழ்ந்து கொண்டிருப்பதாகச் சொல்கிறார் ஷோபிதா.

“சிறிய, மகிழ்ச்சியான நிகழ்வுகளுக்காகப் பெரிதும் மகிழ்வேன். இதுதான் என்னுடைய இயல்பு. சாதாரண மகிழ்ச்சியைவிட இரு மடங்கு மகிழ்ச்சி என்பது நம்மை அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு செல்லும். எனவே நமது சிறிய செயல்களைக்கூட பெரிய நோக்கத்துக்காக அமைத்துக் கொள்வது நல்லது.

“எனது பார்வையில் மிகக் கூர்மையான உணர்வு என்றால் அது நான் கொண்டுள்ள பக்திதான். இந்த உணர்வோடு அனைத்தையும் அணுகினால் யார் பெரியவர், யார் சிறியவர் என்ற போட்டியெல்லாம் ஏற்படாது,” என்கிறார் ஷோபிதா.

சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க தாம் எப்போதுமே தயங்கியதில்லை என்று குறிப்பிட்டுள்ள இவர், மாறுபட்ட கதைகள் அமைந்தால் எந்த மொழி என்றாலும் நடிக்கத் தயார் என்கிறார்.

மேலும் கவர்ச்சியாக நடிப்பதை மட்டுமே தாம் விரும்புவதாக கூறப்படுவதைத் திட்டவட்டமாக மறுக்கிறார்.

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்த பிறகு புதுப்படங்களைத் தேர்வு செய்வதில் மிக கவனமாக உள்ளாராம். அப்படத்தின் மூலம் கிடைத்த பாராட்டுகளையும் வளர்ச்சியையும் தக்கவைப்பது மிக அவசியம் என்பதை உணர்ந்திருப்பதாகச் சொல்கிறார்.

ஹாலிவுட் படைப்பான ‘மங்கி மேன்’ தனது திரை வாழ்க்கையில் முக்கியமான இடத்தைப் பெறும் என்றும் அப்படத்தை திரையில் காண ஆவலுடன் காத்திருப்பதாகவும் சொல்கிறார்.

அதிரடியாகப் பேசுவது, சமூகம் சார்ந்த விவகாரங்கள் தொடர்பில் கருத்து தெரிவிப்பது என துணிச்சலாகச் செயல்படுகிறார் சோபிதா. எல்லாரும் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்துகிறார்.

சில பேட்டிகளில் கடுமையான கருத்துகளைத் தெரிவிப்பதாக சோபிதா குறித்து விமர்சனம் எழுந்துள்ளது. ஆனால் இவர் இதைப்பற்றி எல்லாம் கண்டுகொள்வதாக இல்லை.

மனதில் பட்ட கருத்துகளைத் தெரிவிப்பதில் தாம் எப்போதுமே தயங்கியதில்லை என்கிறார் ஷோபிதா துலிபாலா.

ஷோபிதா யாருடனும் நெருங்கிப் பழக மாட்டார், அனைவரையும் புறக்கணிப்பார் என்றும்கூட தன்னைப் பற்றி சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாவதாகவும் அவற்றை தாம் பொருட்படுத்துவதில்லை என்றும் சொல்கிறார்.

தற்போது அறிமுக இயக்குநர் ஒருவர் கூறிய கதையால் கவரப்பட்டு அதில் நடிக்க ஷோபிதா ஒப்புக்கொண்டுள்ளதாக கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள் கூறுகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!