அண்மைய காலமாக ஆன்மிகப் பாதையில் சென்று கொண்டிருக்கிறார் ‘பிக்பாஸ்’ புகழ் ரம்யா பாண்டியன்.
சில நாள்களுக்கு முன் திருவண்ணாமலை கோவிலுக்குச் சென்றதாகவும் அது தொடர்பான தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பியதாகவும் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். திருவண்ணாமலையில் எடுக்கப்பட்ட படங்களையும் பகிர்ந்துள்ளார்.
“திருவண்ணாமலைக்கு எப்போதுமே எனது இதயத்தில் தனி இடம் உண்டு. என் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றி அமைத்த கோவில் இது,” என்று ரம்யா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இப்போதுவரை ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலைக்குச் சென்று கிரிவலம் மேற்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இத்தகைய ஆன்மிக பயணங்களால் தாம் பெரிதும் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர முடிகிறது என்கிறார்.