அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நாங்கள் ஏன் அரசியலுக்கு வருகிறோம் என்கிறார் விஷால்.
இயக்குநர் ஹரி இயக்கி உள்ள ‘ரத்னம்’ படத்தில் விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். படம் வருகிற 26ஆம் தேதி வெளிவருகிறது.
படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஷால், “இதற்கு முன்பு வெளிவந்த ‘மார்க் ஆண்டனி’ எனக்கு புதிய கதவைத் திறந்தது, ரூ.100 கோடி வசூலால் மரியாதை கிடைத்துள்ளது.
“இயக்குநர் ஹரி என்றாலே உழைப்பு தான். அவர் சொன்னால் எது வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு காட்சி 5 நிமிடம் நினைத்தே பார்க்க முடியாது, என்னை சண்டை நாயகன் என சொல்லக் காரணமே கனல் கண்ணன்தான்.
“எனக்கு 100 தையல் போடப்பட்டிருக்கிறது. அதற்கு பாதி காரணம் அவர்தான், அவர் அமைத்த காட்சி படத்தில் பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கும்.
“நான் பேசுவது பிரச்சினையாகிறது என்கிறார்கள். ஆனால் நான் என் படத்திற்காகப் பேசவில்லை. எல்லோருக்காகவும் போராடுகிறேன்.
“சினிமாவை யாரும் கட்டுப்படுத்த முடியாது, சினிமா எல்லோருக்குமானது. யார் வேண்டுமானாலும் வரலாம். அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நாங்கள் ஏன் இன்னொரு கொடியைத் தூக்கிக் கொண்டு அரசியலுக்கு வர வேண்டும்?
“எனக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது. அதை விட்டுவிட்டு நான் ஏன் அரசியலுக்கு வரவேண்டும்? அவர்கள் வேலையை சரியாக செய்தால் நான் அரசியலுக்கு வர மாட்டேன்,” என்று மேடையில் பேசினார் விஷால்.