திரைச்செய்தி

தாயாகப்போகும் பாலிவுட்டின் முன்னணி நடிகை

ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்த ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் ஜோடி, கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு தீபிகா கர்ப்பமாகியுள்ளதாக அறிவித்துள்ளார். அண்மைய பேட்டி ஒன்றில் பேசிய தீபிகா படுகோன், “எனக்கும் ரன்வீர் சிங்கிற்கும் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். விரைவில் எங்கள் குழந்தையை நீங்கள் காணலாம்,” என்று இணையத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

வில்லன் ரித்து ராஜ் சிங் காலமானார்

‘துணிவு’ படத்தில் சுனில் தாத்தா என்ற வேடத்தில் நடித்திருந்தார் பாலிவுட் நடிகர் ரித்து ராஜ். இவர் அந்தப் படத்தில் ஜான் கொக்கனுடன் இணைந்து வங்கியில் திருடுபவர்களில் ஒருவராக நடித்திருந்தார். அது மட்டுமின்றி அஜித்குமாருக்கும் இவருக்குமிடையே அதிரடியான ஒரு சண்டை காட்சியும் இருந்தது. மேலும் பாலிவுட்டில் திரைப்படங்கள் மட்டுமின்றி இந்தி இணையத் தொடர்களில் நடித்து வந்த ரித்துராஜ் சிங், கணையம் அலர்ஜி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார். நடிகர் ரித்து ராஜ் சிங்கிற்கு தற்போது 59 வயது ஆகிறது.

நாக் அஸ்வினின் படத்தில் டைம் மிஷின்

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘கல்கி 2898 ஏ.டி’. பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். வைஜயந்தி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ‘சூப்பர் ஹீரோ டைம் மிஷின்’ என வித்தியாசமான கதை களத்தில் இப்படம் உருவாகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. இதில் பிரபாஸ், திஷா பதானி சம்மந்தப்பட்ட காதல் பாடல் காட்சியை படமாக்கி வருகின்றனர்.

தாதா சாகேப் பால்கே விருது வென்ற நடிகர் ஷாருக்கான்

2024ஆம் ஆண்டுக்கான ‘தாதா சாகேப் பால்கே’ அனைத்துலக திரைப்பட திருவிழா விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், ‘ஜவான்’ படத்தில் நடித்த நடிகர் ஷாருக்கான் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. விருது பெற்ற பின்னர் நடிகர் ஷாருக்கான் பேசும்போது, “நான் சிறந்த நடிகர் விருதுக்கு தகுதியானவன் என என்னை கருதியதற்காக நடுவருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

ஐஸ்வர்யா லட்சுமி: இந்தப் படத்திற்காக மூன்று படங்களை இழந்தேன்

ஐஸ்வர்யா லட்சுமி மலையாளத்தில் அறிமுகமாகி தற்பொழுது தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் ‘தக் லைஃப்’ படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். இந்தப் படத்திற்கு எந்தவித இடையூறும் ஏற்பட வேண்டாம் என்பதற்காக பிரேம் குமார் இயக்கி வரும் ‘கார்த்தி 27’ மற்றும் அவரது மனைவி இயக்கவுள்ள புதிய படம், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் புதிய படம் என மூன்று படங்களில் நடிக்காமல் ஐஸ்வர்யா லட்சுமி மறுத்துவிட்டதாக கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!