‘வில்லனாக நடிப்பது எனக்குப் பிடிக்கும்’

வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பது குறித்து விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார்.

எந்த மொழியாக இருப்பினும் மாறுபட்ட கதாபாத்திரம் என்றால் உடனடியாக விஜய் சேதுபதி நினைவுதான் இயக்குநர்களுக்கு வருகிறது.

அவரும் இயக்குநர்களுக்கு ஏமாற்றம் அளிக்காமல் சிறப்பான நடிப்பை வழங்கி வருகிறார்.

இந்நிலையில், மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வில்லனாக நடிப்பது தமக்குப் பிடித்திருக்கிறது என்றார்.

“நிஜ வாழ்க்கையில் என்னால் யாரையும் கொடுமைப்படுத்த முடியாது. எனக்கு அத்தகைய மனம் இல்லை. கொலை செய்வது என்பதை என்னால் கற்பனை கூட செய்ய இயலாது.

“ஆனால் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கும்போது இத்தகைய வாய்ப்புகள் அமைகின்றன. நிஜ வாழ்க்கையில் கோபமோ, பொறாமையோ எதுவாக இருந்தாலும் அவற்றை வெளிபடுத்தாமல் பணிவாகத்தான் இருக்க முடியும். ஆனால் திரைப்படங்களில் உணர்ச்சிகளோடு விளையாடலாம்,” என்றார் விஜய் சேதுபதி.

தாம் இவ்வாறு கூறியதற்காக தயவுகூர்ந்து யாரும் தன்னைத் தவறாக நினைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட அவர், உணர்ச்சியுடன் விளையாடுவது என்பது உணவின் சுவையை போன்றது என்றார்.

“எனது நடிப்பில் அனைத்துவிதமான சுவைகளும் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அதனால்தான் வில்லனாக நடிக்க விரும்புகிறேன்,” என்றார் விஜய் சேதுபதி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!