நடுக்கடலில் உருவான படம்

முதன் முதலாக தமிழ் படம் ஒன்று நடுக்கடலில் தயாராகி உள்ளது.

‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’, ‘புலி’, ‘அறை எண் 305ல் கடவுள்’, ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சிம்புதேவன் தற்போது இயக்கி உள்ள புதிய படம் ‘போட்’.

யோகி பாபு, கௌரி கிஷன் நடித்திருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகிறது.

1940களில் இந்தியாவை ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் உலகப் போரின் ஒரு பகுதியாக ஜப்பான் சென்னை மீது குண்டு வீசியது. அதற்கு பயந்த 10 பேர் ஒரு படகில் வங்க கடலுக்குள் செல்கிறார்கள்.

இந்தப் பயணத்தின்போது படகில் ஏற்பட்ட விரிசலால் படகு மூழ்க ஆரம்பிக்கிறது. அதனால் 7 பேர் மட்டுமே படகில் இருக்க முடியும் என்கிற சூழ்நிலை உருவாகிறது.

படகுக்கு வெளியே சுறா மீன் ஒன்று சுற்றி கொண்டிருக்கிறது. அனைவரும் எப்படி தப்பிக்கிறார்கள்? இறுதியில் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

ஆபத்து வருகிறபோது மக்கள் எப்படி சுயநலவாதிகளாக மாறுகிறார்கள். உயிருக்கு பயந்து மனிதாபிமானத்தை எப்படி இழக்கிறார்கள் என்பதோடு உலகில் நடக்கும் யுத்தங்களின் வலியையும் பேசுகிற படமாக உருவாகியுள்ளது.

மொத்த படப்பிடிப்பும் குலசேகரபட்டினம் கடலில் படமாக்கப்பட்டுள்ளளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!