கடந்த ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘காந்தாரா’ திரைப்படம் கன்னடத்தில் மட்டுமல்லாது, பல மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. கிட்டத்தட்ட ரூ.400 கோடிக்கு மேல் இந்தப் படம் வசூல் செய்துள்ளது.
இவர் தனது சொந்த ஊரான கெரடியில் உள்ள அரசு பள்ளி ஒன்றை ‘ரிஷப் ஷெட்டி அறக்கட்டளை’ மூலமாக தத்தெடுத்துள்ளார்.
அரசு பள்ளிகளை மேம்படுத்தும் முன்னெடுப்பாக இந்த செயலில் இறங்கியுள்ளார் ரிஷப் ஷெட்டி. அவருடைய இந்த செயல் மற்ற முன்னணி நடிகர்களுக்கும் ஓர் உந்துதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.