நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பது தனது நீண்டநாள் ஆசை என்கிறார் நடிகை பூமிகா.
நடிக்க வந்த புதிதில் நகைச்சுவை வேடத்தில் நடிக்க தீவிரமாக முயன்றபோதும் அத்தகைய வாய்ப்பு அமையவில்லை என்கிறார்.
“அடிதடி படங்களில்கூட என்னால் நடிக்க முடியும். திகில் படங்களில் நடிக்கவும் விருப்பம் உண்டு. ஆனால் எந்த இயக்குநரும் என் விருப்பத்தைப் புரிந்துகொண்டு வாய்ப்பு அளிக்கவில்லை.
“பொதுவாக நான் தனிமை விரும்பி. படப்பிடிப்பின்போது கிடைக்கும் ஓய்வு நேரத்தில்கூட ஏதாவது புத்தகங்கள் படித்துக்கொண்டிருப்பேன்.
“ஒருவேளை இதை வைத்து எனக்கு நகைச்சுவை வராது என்று நினைத்துவிட்டனர் என்று தோன்றுகிறது,” என்கிறார் பூமிகா.