தனது முதல் படமான ‘கோலமாவு கோகிலா’ படத்தில் தன்னை வெற்றி இயக்குநராக நிலை நிறுத்தினார் நெல்சன்.
முதல் படத்திலே தன்னை வெற்றி இயக்குநராக நிலை நிறுத்திய நெல்சன் அதனைத் தொடர்ந்து சிவகார்த்தி
கேயன் நடிப்பில் ‘டாக்டர்’ படத்தை இயக்கினார். அந்தப் படம் வசூலில் சாதித்தது. இதனால் தனது மூன்றாவது படத்திலேயே விஜய்யை இயக்கும் வாய்ப்பைக் கைப்பற்றினார் நெல்சன் திலீப்குமார்.
விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான ‘பீஸ்ட்’ படம் ஏகப்பட்ட எதிர்மறையான விமர்சனங்களைக் குவித்தது. அத்துடன் இணையவாசிகள் படத்தின் காட்சிகளைக் கிண்டல் செய்து பதிவிட்டனர். இதனால் நெல்சன் மீது விஜய் ரசிகர்கள் கடும் அதிருப்தியடைந்தனர். நல்லவேளையாக ‘பீஸ்ட்’ படம் வெளியாவதற்கு முன்பே ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தை இயக்கும் வாய்ப்பைக் கைப்பற்றினார் நெல்சன்.
இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற விருது விழா ஒன்றுக்கு சிவப்பு கம்பள வரவேற்பில் நடந்து வந்த நெல்சனை பாதுகாவலர்கள் நிகழ்ச்சி நடக்கும் இடத்தை மட்டும் காண்பித்து உள்ளே செல்ல அனுமதித்து இருக்கின்றனர்.
அவரை அங்குள்ள யாரும் உள்ளே அழைத்துச் சென்று உட்கார வைக்கவில்லை.
நெல்சனும் புன்னகையுடன் தன்னுடைய நண்பர் ரெடின் கிங்ஸ்லியுடன் அரங்கத்திற்குள் சென்றுள்ளார். அவருக்குப் பின்னால் வந்த இயக்குநர் லோகேஷை பாதுகாவலர்கள் சிவப்பு கம்பளத்தில் வரவேற்று அழைத்துச் சென்று அவருக்கான இடத்தையும் காட்டி அமர வைத்திருக்கின்றனர்.
இது சம்பந்தமான படங்கள், காணொளிகள் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. “ஒரு படம் சரியாக ஓடவில்லை என்பதற்காக இப்படியா அவமானப்படுத்துவது?” என்று பதிவிட்டு வருகின்றனர். மேலும் “‘ஜெயிலர்’ படம் மூலம் தரமான படத்தைக் கொடுத்து மீண்டும் உங்களை நிலைநிறுத்துங்கள் நெல்சன்,” என்றும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.