பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி இருதய நோய் காரணமாக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
'ரன்', 'சுந்தரா டிராவல்ஸ்', 'வின்னர்', 'திருமலை' உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார் போண்டா மணி.
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் சிங்கப்பூரில் பணியாற்றி வந்தார். அப்போது இயக்குநர் பாக்யராஜை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரது இயக்கத்தில் உருவான 'பவுனு பவுனுதான்' படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார் போண்டா மணி.
இந்நிலையில், திடீரென உடல்நலம் குன்றிய அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் அவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.