லண்டன்: யூரோப்பா லீக் காலிறுதிச் சுற்றிலிருந்து வெளியேறியிருப்பது, லிவர்பூல் பிரிமியர் லீக்கில் கவனம் செலுத்த உதவும் என்று அதன் நிர்வாகி யர்கன் கிளோப் கூறியுள்ளார்.
காலிறுதிச் சுற்றின் முதல் ஆட்டத்தில் இத்தாலியின் அட்லாண்டா குழுவிடம் 3-0 எனும் கோல் கணக்கில் தோற்ற லிவர்பூல், வியாழக்கிழமை (ஏப்ரல் 18) நடைபெற்ற இரண்டாம் ஆட்டத்தில் 1-0 எனும் கோல் கணக்கில் வென்றது. எனினும், 3-1 எனும் மொத்த கோல் எண்ணிக்கையில் போட்டியிலிருந்து லிவர்பூல் வெளியேறியது.
“அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது. எனினும், நாங்கள் விரக்தியோ கோபமோ அடையவில்லை. இனி நாங்கள் பிரிமியர் லீக்கில் கவனம் செலுத்தலாம்,” என்று செய்தியாளர்களிடம் கிளோப் கூறினார்.