ஸ்பெயினில் கொல்லப்பட்ட சிங்கப்பூர் மாது; சந்தேக நபரின் படங்கள் வெளியிடப்பட்டன

ஸ்பெயினில் சிங்கப்பூர் மாது ஆட்ரி ஃபாங் டிரூ கொல்லப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபர் ஏப்ரல் 19ஆம் தேதி ஸ்பெயின் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

சந்தேக நபர் 43 வயது சிங்கப்பூரர். அவரின் பெயரை நீதிமன்றம் வெளியிடவில்லை. ஆடவர் நீதிமன்றத்தில் இருக்கும் காணொளியையும் படங்களையும் ஸ்பெயின் காவல்துறை வெளியிட்டது.

39 வயது ஆட்ரி ஃபாங் டிரூ கடந்த வாரம் காணாமல்போனார். மாதின் உடல் சென்ற வார புதன்கிழமையன்று (ஏப்ரல் 10) மர்சியா வட்டாரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆட்ரி ஃபாங் உடல் அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்குக் கிட்டத்தட்ட 150 கிலோமீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது. மாதின் உடலில் 30க்கும் அதிகமான கத்திக்குத்துக் காயங்கள் காணப்பட்டதாக ஸ்பானிய ஊடகங்கள் தெரிவித்தன.

திருவாட்டி ஃபாங் ஏப்ரல் 4ஆம் தேதி சிங்கப்பூரிலிருந்து ஸ்பெயினுக்குத் தனியாக புறப்பட்டார். அவர் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 12) நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கொலை தொடர்பாக ஸ்பெயின் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்ரி ஃபாங்குக்கும் கைது செய்யப்பட்ட நபருக்கும் ஏற்கெனவே அறிமுகம் இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!